Submitted by rizwan on Fri, 2009-06-26 15:04.

ஒற்றுமை

பகிர்ந்துண்ணும் பழக்கம் 
காணாமல் போயிருந்ததால்
வைத்த ஒரு தட்டு சோற்றையும் 
ஒண்டியாய் உண்ண நினைத்தது 
ஒரு காகம்

உண்ண எத்தனித்தபோது 
எதிர்பாராமல்; 
இன்னும் சில காகங்கள் 
வந்தமர்ந்தது 

உண்ணுவதை விட்டுவிட்டு 
வந்த காகங்களை 
விரட்டுவதிலேயே 
குறியாய் இருக்க. . .

இடைப்பட்ட நேரத்தில் 
அங்கு வந்த பூனையொன்று 
பசியாறிப்போயிற்று 

எந்த காகத்திற்கும்
பருக்கைச் சோறுக்கூட 
கிடைக்காமல்போனது

ஆனாலும்-
அப்பாடா. . .யாருக்கும் கிடைக்கலை வருத்தமற்று நிம்மதியாய்
பறந்துபோயின காகங்கள் 
தமிழ் எழுத்தாளர்கள் குடியிருப்பு 
மாடி ஒன்றிலிருந்து.

        புதுவைப் பிரபா


Posted in Submitted by rizwan on Fri, 2009-06-26 15:04.

Main Links